பிரார்த்தனை உரை
தவத்திரு. மு. பாலகுருசாமிசர்மா,
பறாளை, சுழிபுரம்.
ஆரம்பகாலந் தொடக்கம் சிறந்த அதிபர்களும், சிறந்த ஆசிரியர்களும் கல்வி கற்பித்து மாணவர்களை உருவாக்கினார்கள். அவர்களில் சிலர் டாக்டர், இஞ்சினியர், சட்டத்தரணி, நீதிபதி, தொழிலதிபர், ஆசிரியர்
அரசாங்க சேவை ஆகிய துறைகளில் கடமையாற்றி வருகின்றார்கள்.
இவர்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று கடமையாற்றி
நமது நாட்டிற்கும் கிராமத்துக்கும் கல்லூரிக்கும் நல்ல பெயரை உண்டாக்குகிறார்கள்.
விளையாட்டுத் துறையிலும் சிலர் பிரசித்திபெற்று விளங்குகின்றார்கள்.
இக்கல்லூரியின் நிறுவுநருக்கு சிலை நிறுவி அவருக்கு அஞ்சலி செய்து விழாவும் நடாத்தினார்கள்.
இனிவரும் காலங்களிலும் நல்ல கல்விமான்களை உருவாக்கி நமது நாட்டிற்கும் சுழிபுரம் கிராமத்திற்கும் இக்கல்லூரிக்கும் சிறந்த நற்பெயரைப் பெற்றத்தர வேண்டுமென்று ஆசிகூறி முருகனை வணங்குகின்றேன்.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.